Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரியானாவில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்

அரியானாவில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்

By: Karunakaran Sat, 27 June 2020 10:06:53 AM

அரியானாவில் நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று அரியானா மாநிலம் சோனிபட் நகரில் இருந்து நேற்று காலை வழக்கமான பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தது. புறப்பட்ட சிறிது நேரத்திற்குப்பின், அதில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதன்பின் விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முடிவு செய்துள்ளார். பின்னர் சோனிபட் நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்ட்லிகாசியாபாத்பல்வால் அதிவேக நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டரை தரையிறக்கியுள்ளார்.

haryana,highway,helicopter,indian air force ,அரியானா,நெடுஞ்சாலை, ஹெலிகாப்டர்,இந்திய விமானப்படை

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஹெலிகாப்டர் அதிவேக நெடுஞ்சாலையில் தரையிறங்கியுள்ளதால் அங்கு வேறு வாகனம் ஏதும் வராமல் இருக்க சாலையின் இருபுறத்திலும் தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால் அங்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அதன்பின், ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணி நடைபெற்றது. சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது. அதன்பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின் மீண்டும் சாலை போக்குவரத்து சீராகியது.

Tags :