சீனாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து இந்திய - அமெரிக்கர்கள் குழு ஆர்ப்பாட்ட்டம்
By: Nagaraj Mon, 20 July 2020 6:23:39 PM
இந்திய - அமெரிக்கர்கள் குழு ஆர்ப்பாட்டம்... அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து, வாஷிங்டனைச் சுற்றியுள்ள இந்திய-அமெரிக்கர்கள் குழு சீனத் தூதரகத்தின் முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
சீனாவுக்கு எதிரான பதாகைகளைக் காட்சிப்படுத்தி, “சீனா கம்யூனிஸ்ட்: டவுன் டவுன்” போன்ற முழக்கங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், “சீன வைரஸ் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது மற்றும் உலகப் பொருளாதாரத்தை ஸ்தம்பித்துவிட்டது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
சமூக ஆர்வலர் மனோஜ் ஸ்ரீனிலயம், “தன் மீதான கொரோனா விவகாரத்தை திசை திருப்ப லடாக்கில் இந்திய பிரதேசத்தில் சீன ஆக்கிரமிப்பு மற்றும் இந்தியர்களைக் கொல்வதை நாங்கள் கண்டிக்கிறோம்.” என தெரிவித்தார்.
கடந்த பல தசாப்தங்களாக, இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளை சீனா
கொடுமைப்படுத்துகிறது என்று மற்றொரு ஆர்வலர் மஹிந்திரா சாபா கூறினார்.
“தென் சீனக் கடலில், சீனா சிறிய நாடுகளின் நிலங்களையும் தீவுகளையும்
சட்டவிரோதமாகக் கைப்பற்றி வருகிறது.” என மேலும் தெரிவித்தார்.
அமைதியான
போராட்டம் மேரிலாந்து, வர்ஜீனியா மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் இருந்து
வந்த இந்திய-அமெரிக்க கலாச்சார மற்றும் சமூக அமைப்புகள் மூலம்
முன்னெடுக்கப்பட்டது. சமீபத்தில் அமைக்கப்பட்ட நியூயார்க்கை தளமாகக் கொண்ட
சீன ஏகாதிபத்திய எதிர்ப்புக் குழு அதன் 23 பிரதிநிதிகளையும் போராட்டத்தில்
பங்கேற்க அனுப்பியது.
நியூயார்க்கில் பிரேம் பண்டாரி தலைமையிலான
மற்றொரு குழு சமீபத்தில் சீனாவில் பிராந்திய மோதல்களைக் கொண்ட 23 நாடுகளில்
மக்களை அணிதிரட்ட சீன ஏகாதிபத்திய எதிர்ப்புக் குழுவை உருவாக்கியது. இந்த
குழு கடந்த வாரம் சீன ஏகாதிபத்தியம் குறித்த ஒரு வெபினாரை சீனாவின்
இந்தியாவின் முன்னாள் தூதர் கௌதம் பம்பவாலே மற்றும் முன்னாள் பத்திரங்கள்
மற்றும் பரிவர்த்தனை வாரியத் தலைவர் டி ஆர் மேத்தா உரையுடன் நடத்தியது
குறிப்பிடத்தக்கது.