Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு

By: Nagaraj Mon, 20 July 2020 6:16:48 PM

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு

ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு... முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

summons,presidential commission,ex-ministers,suspension ,
அழைப்பாணை, ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர்கள், இடை நீக்கம்

அத்தோடு குறித்த தினத்தில் முன்னிலையாகுமாறு மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் முன்னாள் ஷானி அபேசிங்க மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஜனக பண்டார ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2016 இல் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரது சாரதி திலும் துசித குமார மற்றும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

Tags :