Advertisement

ராஜித சேனாரத்ன, ஹேஷ விதானகே ஆகியோருக்கு அழைப்பாணை

By: Nagaraj Mon, 24 Aug 2020 5:34:38 PM

ராஜித சேனாரத்ன, ஹேஷ விதானகே ஆகியோருக்கு அழைப்பாணை

அழைப்பாணை... அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் செப்டம்பர் 03 ஆம் திகதி இருவரையும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (21) அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவில் ஆஜரானார்.

presidential commission,appointed,political,revenge ,ஜனாதிபதி ஆணைக்குழு, நியமித்தார், அரசியல், பழிவாங்கல்

ஜூன் மாதத்தில், அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி வழங்கிய முறைப்பாடு குறித்த விசாரணைக்காகவே ராஜித சேனாரத்ன ஆஜராகியிருந்தார்.

கடந்த ஆட்சியின் போது அரசியல் பழிவாங்கல் குற்றச்சாட்டுகள், நீதித்துறை மற்றும் பொலிஸார் மீதான தலையீடு போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வருடம் ஜனவரியில் மாதத்தில் உயர் அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :