Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீன நிறுவனங்களின் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்களை ரத்து செய்தது மகாராஷ்டிர அரசு

சீன நிறுவனங்களின் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்களை ரத்து செய்தது மகாராஷ்டிர அரசு

By: Nagaraj Mon, 22 June 2020 5:36:58 PM

சீன நிறுவனங்களின் ரூ.5 ஆயிரம் கோடி முதலீட்டு திட்டங்களை ரத்து செய்தது மகாராஷ்டிர அரசு

மகாராஷ்டிரா அதிரடி... சீன நிறுவனங்களின் ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 3 முதலீட்டுத் திட்டங்களை மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது.

மகாராஷ்டிர அரசு நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற சீனாவின் கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் மூவாயிரத்து 770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனத் தொழிற்சாலை அமைக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

பிஎம்ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி, சீனாவின் போட்டான் நிறுவனத்துடன் சேர்ந்து ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உடன்பாடு கையொப்பமானது. இதேபோல் ஹெங்க்லி இஞ்சினியரிங் நிறுவனத்தின் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள விரிவாக்கத் திட்டத்துக்கும் உடன்பாடு கையொப்பமானது.

கால்வனில் சீனத் தாக்குதலின் எதிரொலியாக இந்த 3 உடன்பாடுகளையும் மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது. மத்திய அரசுடன் கலந்து பேசிய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரத் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.

maharashtra,industrial,china,companies,cancellations ,மகாராஷ்டிரா, தொழில்துறை, சீனா, நிறுவனங்கள், ரத்து

பிஎம்ஐ எலக்ட்ரோ மொபிலிட்டி, சீனாவின் போட்டான் நிறுவனத்துடன் சேர்ந்து ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க உடன்பாடு கையொப்பமானது. இதேபோல் ஹெங்க்லி இஞ்சினியரிங் நிறுவனத்தின் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள விரிவாக்கத் திட்டத்துக்கும் உடன்பாடு கையொப்பமானது.

கால்வனில் சீனத் தாக்குதலின் எதிரொலியாக இந்த 3 உடன்பாடுகளையும் மகாராஷ்டிர அரசு ரத்து செய்துள்ளது. மத்திய அரசுடன் கலந்து பேசிய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மகாராஷ்டிரத் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் தெரிவித்துள்ளார்.

Tags :
|