Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மார்கழி பிறந்தது... கலர் பொடிகள் விற்பனை சக்கைபோடு போடுது

மார்கழி பிறந்தது... கலர் பொடிகள் விற்பனை சக்கைபோடு போடுது

By: Nagaraj Sat, 19 Dec 2020 11:16:44 PM

மார்கழி பிறந்தது... கலர் பொடிகள் விற்பனை சக்கைபோடு போடுது

மார்கழி பிறந்ததும் கலர் பொடிகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மார்கழி மாதம் பெண்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த மாதத்தில் இருக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையில் எழுந்து வீடுகளுக்கு முன்பு கோலமிடுவார்கள். மார்கழி மாதம் முழுவதும் வீடுகளுக்கு முன்பு பல்வேறு வண்ணங்களில் கோலங்கள் போட்டு அசத்துவார்கள்.

இதற்கு மிக முக்கியமாக வண்ண கோலப்பொடி தேவைப்படுகிறது. தற்போது மார்கழி மாதம் தொடங்கி உள்ளதால், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பெண்கள் அதிகாலையில் தங்கள் வீடுகளுக்கு முன்பு வண்ண வண்ண கோலமிட்டு அசத்தி வருகிறார்கள்.

sales,kolappodi,public,tiruppur,increase ,விற்பனை, கோலப்பொடி, பொதுமக்கள், திருப்பூர், அதிகரிப்பு

இதன் காரணமாக இந்த சீசனை கருத்தில் கொண்டு திருப்பூர் தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் சாலையோர கடைகளில் பலர் வண்ண வண்ண கோலப்பொடிகளை விற்பனை செய்கிறார்கள்.

இதனை பொதுமக்கள் பலரும் விரும்பி வாங்கி செல்கிறார்கள். மேலும், தள்ளுவண்டிகளிலும் ஆங்காங்கே பலர் கோலப்பொடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த விற்பனையும் தற்போது அதிகரித்து வருகிறது. ரூ.5 முதல் ரூ.10 வரை கோலப்பொடி பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

Tags :
|
|