Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

By: Monisha Wed, 16 Sept 2020 12:21:47 PM

தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் சில தினங்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

cauvery,rain,water opening,mettur dam,irrigation ,காவிரி,மழை,தண்ணீர் திறப்பு,மேட்டூர் அணை,பாசனம்

நேற்று 8 ஆயிரத்து 622 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 12 ஆயிரத்து 894 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 15ஆயிரம் கனஅடி தண்ணீரும், கால்வாயில் 500 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 92 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 91.78 அடியானது.

Tags :
|