Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று நடப்பது ஆட்சியல்ல, காட்சி மட்டும் தான் - முக ஸ்டாலின்

இன்று நடப்பது ஆட்சியல்ல, காட்சி மட்டும் தான் - முக ஸ்டாலின்

By: Monisha Mon, 28 Dec 2020 08:47:10 AM

இன்று நடப்பது ஆட்சியல்ல, காட்சி மட்டும் தான் - முக ஸ்டாலின்

மதுரையில் மக்கள் விடுதலை கட்சியின் சார்பில் நேற்று 'தமிழகம் காப்போம்' மாநாடு நடைபெற்றது. இந்த மாநில மாநாட்டில், தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் சொல்லும் 'தமிழகம் மீட்போம்' என்பதாக இருந்தாலும், மக்கள் விடுதலை கட்சி சொல்லும், 'தமிழகம் காப்போம்' என்பதாக இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான். தமிழகத்தை மீட்டால் தான் தமிழகத்தை காக்க முடியும். திராவிட இயக்கம் என்பதே அனைத்து தமிழ் மக்களின் உயர்வுக்கான இயக்கம் தான். தமிழர்களுக்குள் பிரிவுகள் இல்லை. அதைவிட முக்கியமாக மேல், கீழ் என்ற பேதம் இல்லை என்பதை உருவாக்க முயற்சிக்கும் இயக்கம். மதத்தை காட்டி, இனத்தை காட்டி மக்களை அடிமைகொள்ள முயற்சிப்பவர்கள் இருக்கும் வரை மக்கள் விடுதலை கட்சிகள் தேவை.

mk stalin,regime,scene,conference,people liberation party ,முக ஸ்டாலின்,ஆட்சி,காட்சி,மாநாடு,மக்கள் விடுதலை கட்சி

தி.மு.க.வை பொறுத்தவரை இது ஒடுக்கப்பட்டோருக்கான இயக்கம். ஆட்சியில் இருந்தால் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமையை சட்டமாக்கும். ஆட்சியில் இல்லாவிட்டால் ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக போராடும். விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், ஒடுக்கப்பட்டோர், விளிம்பு நிலை மக்கள் உயர்வுக்காக நடத்தப்பட்ட ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமான ஆட்சி தி.மு.க. ஆட்சி. ஆனால் இன்று நடப்பது ஆட்சியல்ல, காட்சி மட்டும் தான்.

ஒரு காலத்தில் புகழ்மிக்க தமிழகமாக இது இருந்தது. ஆனால் இன்று அடிமை தமிழகமாக இருக்கிறது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏற்பட்ட மொத்த பின்னடைவையும் கடந்த பா.ஜ.க. - அ.தி.மு.க. காலத்தில் பார்த்துவிட்டோம். இனியும் பொறுக்க முடியாது. பொங்கி எழுவோம். தமிழகம் மீட்போம். தமிழகம் காப்போம் என்று பேசினார்.

Tags :
|
|