Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது - பிரதமர் மோடி

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது - பிரதமர் மோடி

By: Karunakaran Sat, 12 Dec 2020 2:04:37 PM

விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது - பிரதமர் மோடி

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) 93வது ஆண்டு பொதுக் கூட்டம் மற்றும் வருடாந்திர மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டு துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகையில், கடந்த 6 ஆண்டுகளில் உலகம் இந்தியா மீது வைத்திருந்த நம்பிக்கையானது, கடந்த சில மாதங்களில் மேலும் வலுப்பெற்றிருகிறது என்று தெரிவித்தார்.

அந்நிய நேரடி முதலீடாக இருந்தாலும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களாக இருந்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்து சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து முதலீடு செய்கின்றனர். நீண்ட கால போட்டித்தன்மையில் சாதகமான துறைகளில் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என மோடி கூறினார்.

new agricultural laws,agriculture,modi,farmers ,புதிய விவசாய சட்டங்கள், விவசாயம், மோடி, விவசாயிகள்

வேளாண் உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், சேமிப்பு அல்லது குளிர்பதன கிடங்கு என விவசாயத் துறைக்கும் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற துறைகளுக்கும் இடையில் உள்ள தடுப்பு சுவர்களை கண்டோம். விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சீர்திருத்தங்களுக்குப் பிறகு, விவசாயிகளுக்கு புதிய சந்தைகள், விருப்பத் தேர்வுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் அதிக நன்மை கிடைக்கும் என மோடி மாநாட்டில் பேசினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அவர்களை சமாதானம் செய்யும் வகையில், பிரதமர் மோடி ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வேளாண் சட்ட சீர்திருத்தங்களால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags :
|