Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு குமரியில் அனுமதி இல்லை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு குமரியில் அனுமதி இல்லை

By: Monisha Thu, 24 Dec 2020 2:40:14 PM

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு குமரியில் அனுமதி இல்லை

கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2020-ம் ஆண்டு நிறைவடைந்து 2021-ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் பிறக்க உள்ளது. பொதுவாக குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக இருக்கும்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரை உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் கூடி புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

new year,celebrations,corona,fear,permission ,புத்தாண்டு,கொண்டாட்டங்கள்,கொரோனா,அச்சம்,அனுமதி

குமரியில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டையொட்டி கன்னியாகுமரிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தால், கொரோனா தொற்று மீண்டும் பரவக்கூடும். ஏற்கனவே,வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கி உள்ளது.

எனவே பொதுமக்களின் நலன் கருதி வருகிற 31-ம் தேதி இரவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்றவைகள் வழக்கம் போல் செயல்படும். எனினும் அதில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. மேலும் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை. மேலும் அரசு அறிவுறுத்தும் நோய் தடுப்பு விதிகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அரவிந்த் கூறியுள்ளார்.

Tags :
|
|