Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் மீண்டும் பிசிஆர் பரிசோதனைகள்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் மீண்டும் பிசிஆர் பரிசோதனைகள்

By: Nagaraj Wed, 11 Nov 2020 2:13:09 PM

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் மீண்டும் பிசிஆர் பரிசோதனைகள்

மீண்டும் பரிசோதனைகள் ஆரம்பம்... யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.

மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ.முருகானந்தன், மு.கலாமதி மற்றும் பேராசிரியர் செ.கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கு என யாழ். பல்கலைக்கழகத்தினால் நான்கு நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களும் புதிதாகப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

university,faculty of medicine,pcr examination,initiation ,பல்கலைக்கழகம், மருத்துவ பீடம், பிசிஆர் பரிசோதனை, தொடக்கம்

வடக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இதேநேரம், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்ய முடியும்.

மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ்.ரமேஸ் தெரிவித்துள்ளார்.

Tags :