Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி

By: Monisha Thu, 01 Oct 2020 09:33:12 AM

புதுவையில் வருகிற 15-ந் தேதி முதல்  திரையரங்குகளை திறக்க அனுமதி

புதுவை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய ஊரடங்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அருண் நேற்று நள்ளிரவு பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

புதுவையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை பள்ளிகளுக்கு சென்று நிவர்த்தி செய்துகொள்ளும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதன்படி 10, 12 ஆகிய வகுப்புகள் 5-ந்தேதி முதலும், 9, 11-ம் வகுப்புகள் 12-ந்தேதி முதலும் தொடங்கும். உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கப்படும்.

விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பயன்படுத்தும் நீச்சல் குளங்கள், பூங்காக்களை 15-ந் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் வருகிற 15-ந் தேதி முதல் திறக்கலாம்.

pondicherry,schools,parks,theaters,hotels ,புதுச்சேரி,பள்ளிகள்,பூங்காக்கள்,திரையரங்குகள்,ஓட்டல்கள்

கட்டுப்பாட்டு மண்டலங்கள் இல்லாத பகுதிகளில் 100 நபர்கள் வரை கல்வி, விளையாட்டு, பொழுதுப்போக்கு, அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். அனைவரும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

ஓட்டல்களில் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம். இரவு 10 மணி வரை பார்சல் மூலமாக விற்பனை செய்துகொள்ளலாம். புதுச்சேரி கடற்கரை இரவு 9 மணி வரை மக்கள் நடைபயிற்சிக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது. மதுபான கடைகள் இரவு 9 மணி வரை திறக்கலாம். கட்டுப்பாட்டு மண்டலங்களில் அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு தொடரும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|