Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெண்கள் பாதுகாப்பில் உஷாராக இருக்கிறோம்; துர்கா பூஜை முன்னிட்டு பிரதமர் மோடி உரை

பெண்கள் பாதுகாப்பில் உஷாராக இருக்கிறோம்; துர்கா பூஜை முன்னிட்டு பிரதமர் மோடி உரை

By: Monisha Fri, 23 Oct 2020 08:31:05 AM

பெண்கள் பாதுகாப்பில் உஷாராக இருக்கிறோம்; துர்கா பூஜை முன்னிட்டு பிரதமர் மோடி உரை

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும். இதன் 5 நாள் கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. இதையொட்டி, கொல்கத்தாவில், கிழக்கு மண்டல கலாசார மையம் ஏற்பாடு செய்த துர்கா பூஜை கொண்டாட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு துர்கா பூஜை, கொரோனா காரணமாக, குறைந்த அளவிலேயே கொண்டாடப்படுகிறது. ஆனாலும் உற்சாகத்துக்கு குறைவே இல்லை. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி துர்கா பூஜையை கொண்டாட வேண்டும். முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்.

சக்தியின் வடிவமாக துர்கா வழிபடப்படுகிறார். அத்தகைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கற்பழிப்பு குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும்வகையில் சட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் உஷாராக இருக்கிறோம்.

west bengal,durga puja,prime minister modi,speech,corona virus ,மேற்கு வங்காளம்,துர்கா பூஜை,பிரதமர் மோடி,உரை,கொரோனா வைரஸ்

இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் துர்கா பூஜை பிரதிபலிக்கிறது. வங்காளத்தின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் உணர்த்துகிறது. சுதந்திர போராட்டத்தில் மேற்கு வங்காள மக்களின் பங்களிப்பு அதிகம். அதுபோல், இங்கு தோன்றிய தலைவர்களும், சீர்திருத்தவாதிகளும் நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கிய பங்காற்றி உள்ளனர்.

'தற்சார்பு இந்தியா' என்ற இலக்கை அடைவதில், இந்தியாவுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் திறன், மேற்கு வங்காளத்துக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
|