Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்

நடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்

By: Karunakaran Wed, 23 Sept 2020 6:48:11 PM

நடிகை தீபிகா படுகோன் உள்பட 4 நடிகைகளுக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்

பிரபல இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், நடிகை ரியா போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், சுஷாந்த் சிங்கிற்காகவும் போதைப்பொருள் வாங்கியதும் தெரியவந்தது. அதன்பின், நடிகை ரியா, அவரது தம்பி சோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக்காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

police,four actresses,deepika padukone,drug case ,போலீசார், நான்கு நடிகைகள், தீபிகா படுகோனே, போதை மருந்து வழக்கு

அதன்பின், கைதான ரியா உள்பட கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பிரபல தமிழ் நடிகை ரகுல்பிரீத் சிங், இந்தி நடிகை சாரா அலிகான், பேஷன் டிசைனர் சிமான் கம்பாட்டா ஆகியோருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். ற்று முன்தினம் சுஷாந்த் சிங்கின் திறன் மேலாளர் ஜெயா ஷாவிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

தற்போது, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேயின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் மற்றும் திறன் மேலாண்மை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி துருவ் சிட்கோபேகருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். தற்போது, போதைப்பொருள் வழக்கில் நடிகை தீபிகா படுகோனேயும் சிக்கலாம் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் மற்றும் ரகுல்பிரீத் சிங் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

Tags :
|