Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

By: Monisha Sat, 12 Dec 2020 12:27:32 PM

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. மேலும் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையிலும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அரையாண்டு தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

school,mid exam,online,minister,announcement ,பள்ளி,அரையாண்டு தேர்வு,ஆன்லைன்,அமைச்சர்,அறிவிப்பு

இந்த அறிவிப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது:- தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். அதில் ஆட்சேபம் இல்லை.

அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை. 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Tags :
|
|