Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குவது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தகவல்

தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குவது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தகவல்

By: Nagaraj Tue, 29 Sept 2020 5:46:41 PM

தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குவது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தகவல்

தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கான அறிவிப்பை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கி இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்துள்ள அவர், தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது நானே பிரதமர், எனவே பேச்சுவார்த்தை ஊடாக அதற்கான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

prime minister,plantation workers,salary,prohibition,import ,பிரதமர், தோட்டத் தொழிலாளர்கள், சம்பளம், தடை, இறக்குமதி

அதேநேரம் 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக பிரதமரின் அதிகாரம் குறையாது என்றும் அவர் தெரிவித்தார். இதன்போது 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து இந்தியப் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய விடயம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவப்பட்டபோது, சில விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தியதாக தெரிவித்தார்.

எனினும் தாம் மோடியுடன் இது குறித்து பேசிய விடயங்கள் நினைவில் இல்லை எனவும் நகைச்சுவையாக பிரதமர் குறிப்பிட்டார். மஞ்சள் இறக்குமதிக்கான தடை நீக்கப்படாது என்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.

Tags :
|