Advertisement

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

By: Nagaraj Fri, 11 Sept 2020 7:48:34 PM

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்... சுத்தமான கொழும்பு திட்டத்தின் ஊடாக ஜனனம் பவுண்டேஷன் அமைப்பினரால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையின் காரணமாக பல மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளதுடன் கொழும்பின் பல பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொருளாதார நகரம் என்றபோதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகையானது கொழும்பில் கணிசமான அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

relief,volum,dry food packs,plan ,நிவாரணம், வௌள்ம், உலர் உணவுப் பொதிகள், திட்டம்

இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கொழும்பிலுள்ள பல குடும்பங்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றன. இந்நிலையில் கலாநிதி.வி.ஜனகன்,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு வாழ் மக்களுக்காக ‘சுத்தமான கொழும்பு’ திட்டத்தின் கீழ் பல நிவாரண திட்டங்களை தற்போது செயற்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் நவகம்புர, தமிழ்நாடு, தெமட்டகொட ஆகிய பகுதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் சமைத்த உணவுகள் ஆகியன ‘சுத்தமான கொழும்பு’ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|
|