Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில் ரயில் மறியல் போராட்டம்

விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில் ரயில் மறியல் போராட்டம்

By: Nagaraj Fri, 11 Dec 2020 10:05:39 AM

விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடில் ரயில் மறியல் போராட்டம்

ரயில் மறியல் நடத்தப்படும்... வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் நாடு முழுவதும் ரயில் மறியல் பேராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 16ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

rail stir,farmers,warning,agricultural law ,ரயில் மறியல், விவசாயிகள், எச்சரிக்கை, வேளாண் சட்டம்

மேலும் போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறாவிட்டால் நாடு முழுதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும், டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் அதிகமானோருக்கு உணவு தயாரிக்கும் இயந்திரத்துடன் காத்திருக்கும் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

Tags :