Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் அமோக விற்பனை

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் அமோக விற்பனை

By: Monisha Sat, 12 Dec 2020 08:34:16 AM

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள் அமோக விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் வீடுகளின் முன்பு கிறிஸ்துமஸ் நட்சத்திரங்களை தொங்க விடுவது வழக்கம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் விதவிதமான நட்சத்திரங்களை தொங்க விட்டு வருகின்றனர். மேலும் தேவாலயங்களிலும் விதவிதமான ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து அலங்காரங்கள் செய்தும் வருகிறார்கள்.

இதனை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏராளமான கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் விற்பனைக்காக கடைகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் காகிதத்தால் ஆன நட்சத்திரங்கள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நட்சத்திரங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விதவிதமான, பல அடுக்குகளாக தொங்கும் நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

thoothukudi,christmas,stars,christmas grandpa,christmas tree ,தூத்துக்குடி,கிறிஸ்துமஸ்,ஸ்டார்கள்,கிறிஸ்துமஸ் தாத்தா,கிறிஸ்துமஸ் மரம்

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட நட்சத்திரங்கள் ரூ.60 முதல் ரூ.250 வரையும், அட்டையால் செய்யப்பட்ட நட்சத்திரங்கள் ரூ.80 முதல் ரூ.350 வரையும் விற்கப்படுகிறது.

இந்த ஆண்டு புதுவரவாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட நட்சத்திரங்கள் வெகுவாக மக்களை கவர்ந்து உள்ளது. இந்த நட்சத்திரங்கள் ரூ.120 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதேபோன்று கிறிஸ்துமஸ் மரங்கள், பொம்மைகளும் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

Tags :
|