Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் மாதத்துக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம்; நீதிமன்றம் கருத்து

டிசம்பர் மாதத்துக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம்; நீதிமன்றம் கருத்து

By: Nagaraj Thu, 12 Nov 2020 09:16:21 AM

டிசம்பர் மாதத்துக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம்; நீதிமன்றம் கருத்து

டிசம்பர் மாதத்திற்கு பின்னர் கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வரும் 16ந் தேதி தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் 16ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தபோது, பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன. பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என்று தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

case trial,opening of schools,opinion,court ,வழக்கு விசாரணை, பள்ளிகள் திறப்பு, கருத்து, நீதிமன்றம்

அப்போது நீதிபதிகள், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் டிசம்பர் மாதத்துக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது.

இது தொடர்பாக அரசு சிறந்த முடிவெடுக்கும். பள்ளிக் கல்லூரிகளை திறப்பதில் பிற மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணை நவம்பர் 20-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags :