Advertisement

தேர்வுக்கான கேள்வியையே பதிலாக எழுதிய மாணவ, மாணவிகள்

By: Nagaraj Fri, 06 Nov 2020 09:20:08 AM

தேர்வுக்கான கேள்வியையே பதிலாக எழுதிய மாணவ, மாணவிகள்

இது என்ன காலக் கொடுமை... அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள், தேர்வுக்கான கேள்வியையே பதிலாக எழுதி கல்லூரி முதல்வரிடம் வழங்கிய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்படுள்ளது.

அரியலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு முதுகலை பொருளாதாரத்தில் 25 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா காலத்தால் கல்லூரிகள் நடைபெறாத நிலையில் சம்பந்தப்பட்ட பாடங்கள் இணைய வழியில் நடத்திட தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் இரண்டாமாண்டு எம்ஏ பொருளாதாரம் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு பொருளாதார துறைத் தலைவர் விஜயகுமார் முறையாக இணைய வழியில் பாடம் நடத்தவில்லை என மாணவ-மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

students,students,semester,question,answer ,மாணவர்கள், மாணவிகள், செமஸ்டர், கேள்வி, பதில்

மேலும், முதல் செமஸ்டருக்கு பொருளாதாரத்தில் எந்தெந்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்ற நிலையே தெரியாத நிலையிலேயே இன்று தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை உள்ளதாகவும், இதனால் கேள்வியையே பதிலாக எழுதி எங்களது கல்லூரி முதல்வர் மலர்விழியிடம் கொடுத்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தற்போது நடைபெற்ற செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :