மூன்று நாட்களாக காணாமல் போன தமிழ் இளைஞர் மீட்பு
By: Nagaraj Thu, 10 Dec 2020 4:05:07 PM
பத்திரமாக மீட்பு... கனடாவில் மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த தமிழ் இளைஞர் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவில் வசிக்கும் 25 வயது இளைஞரான டிலன் நவராஜா என்பவர் கடந்த 6ஆம் திகதி காணாமல் போனார். அன்றைய தினம் மதியம் 2 மணிக்கு கடைசியாக நவராஜா Keele St & Fourwinds Dr பகுதியில் காணப்பட்டார்.
அவரின் உயரம் 5 அடி 8 அங்குலம் என பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மாயமான நவராஜா தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். நவராஜாவை கண்டுபிடிக்கும் விடயத்தில் உதவிய பொதுமக்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளனர்.
Tags :
police |
navaraja |