Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாணவர்கள் மத்தியில் எழுந்த தர்க்கத்தால் யாழ்.பல்கலை.,யில் பதற்றம்

மாணவர்கள் மத்தியில் எழுந்த தர்க்கத்தால் யாழ்.பல்கலை.,யில் பதற்றம்

By: Nagaraj Thu, 08 Oct 2020 8:15:13 PM

மாணவர்கள் மத்தியில் எழுந்த தர்க்கத்தால் யாழ்.பல்கலை.,யில் பதற்றம்

யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாணவர்கள் மத்தியில் எழுந்த தர்க்கம்தான் பதற்றத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமூகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தம் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இன்றைய தினம் மாலை பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தை நாடி தர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றுள்ளனர். அப்போது காவலாளி மற்றும் விரிவுரையாளர்கள், காவலாளி ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன், துணைவேந்தர் தாக்குதல் நடத்தி கழுத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மாணவன் கழுத்தில் காயத்தையும் காண்பித்துள்ளார். இதனால் பதற்றம் உருவாகி உள்ளது.

jaffna. university,students,logic,attack,police ,
யாழ். பல்கலைக்கழகம், மாணவர்கள், தர்க்கம், தாக்குதல், பொலிஸார்

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக வாயிலில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், பல்கலைக்கழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை இறக்கி அடிப்போம். சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

மேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றுவோம் என அச்சுறுத்தியதாக கூறும் மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தருக்கும், காவலாளிக்கும், விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

Tags :
|
|