Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவில்பட்டி அருகே பெற்றோரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி

கோவில்பட்டி அருகே பெற்றோரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி

By: Karunakaran Sun, 15 Nov 2020 1:43:39 PM

கோவில்பட்டி அருகே பெற்றோரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி

கோவில்பட்டி அருகே உள்ள அழகப்பாபுரத்தை சேர்ந்தர் விஜய பாண்டியன் மனைவி சிங்கம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் செல்லப்பாண்டி தண்ணீர் டேங்க் வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அழகப்பாபுரம் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

2-வது மகன் முத்துப்பாண்டி ஓட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக செல்லப்பாண்டி தனது குடும்பத்துடன் அழகப்பாபுரத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். தீபாவளி பண்டிகை என்பதால் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களுடன் மது அருந்தி உள்ளனர்.

brother,attack,parents,kovilpatti ,அண்ணன், தாக்குதல், பெற்றோர், கோவில்பட்டி

இரவில் மது போதையில் இருந்த சகோதரர்கள் இருவரும் சாப்பிட சென்ற போது, செல்லபாண்டியன் வீட்டில் இருந்த தனது பெற்றோரை அவதூறாக பேசி தாக்கி உள்ளார். இதனை முத்துப்பாண்டி தடுத்ததில் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி கம்பு மற்றும் கற்களை கொண்டு முத்துப்பாண்டியை தாக்கயுள்ளார். அடி தாங்க முடியமால் முத்துப்பாண்டி அருகில் இருந்த தொழுவத்திற்கு ஓடியுள்ளார்.

அவரை விடாமல் தூரத்தி சென்ற செல்லப்பாண்டி தான் வைத்திருந்த கத்தியால் முத்துப்பாண்டியை குத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது முத்துப்பாண்டி, அண்ணணிடம் இருந்த கத்தியை பிடுங்கி, அவரை குத்திக்கொலை செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே செல்லப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லப்பாண்டி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முத்துப்பாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|