Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகள் வரும் 30-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு

விவசாயிகள் வரும் 30-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு

By: Karunakaran Mon, 28 Dec 2020 7:21:19 PM

விவசாயிகள் வரும் 30-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது விவசாயிகள் போராட்டம் இன்று 33-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளின் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இதுவரை 5 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால், விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய அனைத்துகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

central government,farmers,delhi,agricultural laws ,மத்திய அரசு, விவசாயிகள், டெல்ஹி, விவசாய சட்டங்கள்

டெல்லி எல்லையின் பல்வேறு சாலைகளை முடக்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய அமைப்புகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. 30-ம் தேதி (புதன்கிழமை) பேச்சுவார்த்தைக்கு வரும்படியும், பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விடுத்துள்ள பேச்சுவார்த்தை அழைப்பை ஏற்பது குறித்து விவசாய அமைப்புகள் விரைவில் முடிவெடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் விவசாய அமைப்புகள் பங்கேற்று வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்பட்டு டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் போராட்டம் முடிவுக்கு வருமா? என்பது புதன்கிழமை தெரியவரும்.

Tags :
|