கொரோனா இரண்டாவது அலை சூழ்ந்து விட்டது; பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தகவல்
By: Nagaraj Thu, 24 Sept 2020 4:31:12 PM
இரண்டாவது அலை சூழ்ந்து விட்டது... கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்கனவே கனடாவை சூழ்ந்துவிட்டது என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் ஆகிய நான்கு பெரிய மாகாணங்களில் கொரேனாவின் இரண்டாவது அலை ஏற்கனவே பரவி கொண்டிருக்கிறது.
வசந்த காலத்தை விட மோசமாக இருக்கக்கூடிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
இன்று பதிவாகும் கொரோனா வழக்கு எண்ணிக்கைகளையோ அல்லது நாளை பதிவாக போகும் வழக்கு எண்ணிக்கைகளையோ கூட நம்மால் மாற்ற முடியாது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு நாம் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தவறியதன் மூலம்
பதிவாக போகும் கொரோனா வழக்கு எண்ணிக்கைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு
விட்டன.
ஆனால் அக்டோபரிலும், குளிர்காலத்திலும் நாம் கொரோனா எண்ணிக்கைகளை மாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலக
சுகாதார அமைப்பு மார்ச் 11 அன்று கொரோனாவை தொற்று நோயாக அறிவித்தது.
இன்றுவரை, உலகளவில் 31.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால்
பாதிக்கப்பட்டுள்ளனர், 9,74,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கனடா இதுவரை சுமார் 1,50,000 கொரோனா வைரஸ் வழக்குகளை பதிவு செய்துள்ளது, இதில் 9,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.