Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா விதிமுறைகளுக்கு மாறான தகவல்களை வெளியிட்டதாக டிரம்பின் பதிவை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

கொரோனா விதிமுறைகளுக்கு மாறான தகவல்களை வெளியிட்டதாக டிரம்பின் பதிவை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

By: Karunakaran Wed, 07 Oct 2020 6:48:15 PM

கொரோனா விதிமுறைகளுக்கு மாறான தகவல்களை வெளியிட்டதாக டிரம்பின் பதிவை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் அதிபர் டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகின்றார். இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

இந்நிலையில் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, ஆரம்பகாலத்தில் கொரோனா வைரசை குறைத்து மதிப்பிட்டது போன்று, இப்போது பருவகால காய்ச்சலுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘காய்ச்சல் காலம் தொடங்க உள்ளது. பருவகால காய்ச்சலுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் நேரிடுகிறது. தடுப்பு மருந்து இருந்தும் சில நேரங்களில் ஒரு லட்சத்தை தாண்டி உயிரிழப்பு ஏற்படுகிறது என்று கூறினார்.

facebook company,trump,violates,corona rules ,பேஸ்புக் நிறுவனம், டிரம்ப், விதிமுறை மீறல், கொரோனா

மேலும் அவர், இதற்காக நாட்டின் நிர்வாகத்தை நாம் மூடப் போகிறோமா? இல்லை. கொரோனா வைரசுடனும் நாம் இணைந்து வாழ கற்றுக்கொள்வதைப் போன்று, அந்த வைரஸ்களுடன் இணைந்து வாழ கற்றுக்கொண்டோம். பெரும்பாலான மக்களுக்கு வைரஸ் பரவினாலும் உயிரிழப்பு மிக்குறைவு’ என்று டிரம்ப் அந்த பதிவில் கூறியிருந்தார்.

உலக நாடுகளை தொடர்ந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த கருத்து தங்களின் கொரோனா கால விதிமுறைகளை மீறி மக்களை தவறாக வழிநடத்தியதாக கூறி, டிரம்பின் பதிவை பேஸ்புக் நீக்கி உள்ளது. மேலும், டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை வாசகங்களுடன் அந்த பதிவை மறைத்துள்ளது.

Tags :
|