அருட்காட்சியங்களுக்காக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அரசு
By: Nagaraj Tue, 10 Nov 2020 09:15:01 AM
வழிகாட்டு நெறிமுறைகள்... தமிழகத்தில் இன்று முதல் அருங்காட்சியகங்களை மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 2 மாதமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அருங்காட்சியகத்துக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
முகக்கவசம் அணியாதோரை அனுமதிக்கக் கூடாது. கொரோனா அறிகுறிகள் இல்லாதோரை
மட்டும் அனுமதிக்க வேண்டும், 6 அடி இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 3 மணி
நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
உள்ளே வருவதற்கு ஒரு வழி, வெளியே செல்ல இன்னொரு வழியை ஏற்படுத்தி தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.