Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கீரியிடம் சிக்கிய பாம்பு... ஏழே விநாடியில் மடக்கி சாய்த்தது

கீரியிடம் சிக்கிய பாம்பு... ஏழே விநாடியில் மடக்கி சாய்த்தது

By: Nagaraj Thu, 20 Aug 2020 7:57:06 PM

கீரியிடம் சிக்கிய பாம்பு... ஏழே விநாடியில் மடக்கி சாய்த்தது

பாம்பும் கீரியும் ஜென்ம விரோதிகள் என்பார்கள். அதாவது எங்கு கண்டாலும் மோதல்தான். சில நேரங்களில் பாம்பு தப்பி சென்று விடும். ஆனால் பாம்பு கீரியிடம் சிக்கினால் துண்டு துண்டுகளாக்கி விடும்.

அந்த வகையில் கோவாவில் சாலையின் குறுக்கே நாகப்பாம்புடன் சண்டையிட்ட கீரி ஒன்று சில வினாடிகளில் பாம்பை கவ்விச்சென்றது. புதருக்குள் இருந்து வெளியே வந்த நாகப்பாம்பை விரட்டி வந்த கீரிக்குட்டி ஒன்று அதனை தாக்க, தன்னை தற்காத்துக் கொள்ள அந்த நாகப்பாம்பு படம் எடுத்து பயமுறுத்தியது.

goa,giraffe,snake,7 seconds,dragged into the bush,viral ,கோவா, கீரி, பாம்பு, 7 விநாடி, புதருக்குள் இழுத்து, வைரல்

பாம்பை கண்டு பயந்து செல்வது போல பின் வாங்கிய கீரிக்குட்டி வேகமாக சென்று எண்ணி ஏழே செகண்டில் பாம்பின் தலையை கவ்வி புதருக்குள் இழுத்து சென்றுவிட்டது

சண்டையில் ஜெயித்தவர்களை விட, தந்திரத்தால் ஜெயித்தவர்கள் தான் இங்கே அதிகம் என்ற கீரியின் சாதுர்யத்தை உணர்த்தும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Tags :
|
|