பேச்சுவார்த்தை வாயிலாகதான் தீர்வு காண வேண்டும்; மத்திய அமைச்சர் தகவல்
By: Nagaraj Fri, 25 Dec 2020 9:19:24 PM
பேச்சுவார்த்தையே தீர்வு... பிரச்னைகளை பேச்சுவார்த்தை வாயிலாக தான் தீர்வு காண வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது இந்த அரசு மரியாதை வைத்துள்ள என மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார்.
டில்லி துவாரகா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மீது இந்த அரசு மரியாதை வைத்துள்ளது. நானும் ஒரு விவசாயி மகன் தான். உங்கள் நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது.
விவசாய பெருமக்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இந்த மூன்று புதிய வேளாண்
சட்டங்களை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு , சோதனை முயற்சியாக முயன்று
பாருங்கள். அது பலன் அளிக்கவில்லை என அப்போதும் நீங்கள் நினைத்தால் தேவையான
திருத்தங்களை செய்ய இந்த அரசு தயாராக உள்ளது.
எல்லா
பிரச்னைகளுக்கும் பேச்சு வாயிலாக தான் தீர்வு காணமுடியும். விவசாயிகளுடனான
பேச்சை தொடர, பிரதமர் மோடி விரும்புகிறார். விவசாயிகள் முன் வந்து அரசுடன்
பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.