Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூகுள் நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்தது

கூகுள் நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்தது

By: Nagaraj Wed, 21 Oct 2020 3:47:56 PM

கூகுள் நிறுவனம் மீது அமெரிக்கா வழக்கு தாக்கல் செய்தது

கூகுள் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வழக்கு... இணைய தேடல்கள் மற்றும் ஒன்லைன் விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்து கொள்வதற்கான சட்டத்தை கூகுள் நிறுவனம் மீறியுள்ளதாக தெரிவித்து அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது நடைமுறைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தீவிரமாக ஆராய்வதால் இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வழக்கை குறைபாடுடைய வழக்காக கருதுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நீதி திணைக்களத்தின் 11 மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகளால் சமஷ்டி நீதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதன் தேடுபொறி மற்றும் உலாவிகள் என்பன பயனாளர்களின் கையடக்கத் தொலைபேசிகளில் இயல்பாகவே காட்சிப்படுத்தப்படுவதற்காக பில்லியன் டொலர்கள் செலுத்துவதை நீதிபதிகள் கவனத்திற் கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

google,search engine,case,usa,companies ,கூகுள், தேடுபொறி, வழக்கு, அமெரிக்கா, நிறுவனங்கள்

இந்த உடன்படிக்கைகளினூடாக இணைய காவலாளியாக செயற்படுவதற்கான இடத்தை கூகுள் நிறுவனம் தக்கவைத்துக் கொள்ள கூடியதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனூடாக அமெரிக்காவில் 80 வீதமான தொலைக்காட்சி நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதான இயலுமையும் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்படுவதாக சுட்டிக்காட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கூகுள் அதன் தேடுபொறி உலாவிகள் மற்றும் மொபைல் போன்கள் போன்ற சாதனங்களில் இயல்புநிலை விருப்பமாக நிறுவப்பட்டிருப்பதை உறுதிசெய்ய பில்லியன் கணக்கான டொலர்களை செலுத்துகிறது.

Tags :
|
|
|