யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்; நித்தியானந்தாவின் அதிரடி அறிவிப்பு
By: Nagaraj Sun, 23 Aug 2020 7:17:47 PM
கைலாசா நாட்டில் யாருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
கைலாசா நாட்டில் மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலையை சேர்ந்தவர்களுக்கு வணிக செயல்பாடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
கைலாசா எனும் தனிநாட்டை உருவாக்கி இருப்பதாக கூறும் நித்தியானந்தா அந்நாட்டிற்கான நாணயத்தை நேற்று வெளியிட்டார். இந்த நாணயமானது பொற்காசு என்ற பெயரில் அழைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கைலாசா நாட்டில் ஹோட்டல் வைக்க அனுமதி கோரி, மதுரையை
சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை
எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து நேரலையில் தோன்றி பேசிய
நித்தியானந்தா, கைலாசா நாட்டு பொருளாதார, வணிக செயல்பாடுகளில், மதுரை,
திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு
முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.
உடம்பில் ஓடும் ரத்தம்,
உயிரில் இருக்கிற தைரியம் இவை எல்லாம், இந்த மூன்று ஊர் மக்கள் போட்ட
பிச்சை என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார். திருவண்ணாமலை மலை
அடிவாரத்தின் பல்வேறு பகுதிகளில், சிசிடிவி கேமிரா வைத்து தரிசனம் செய்து
வருவதாக தெரிவித்த நித்தியானந்தா, சிசிடிவி சிக்னலை வைத்து கைலாசா நாட்டை
கண்டுபிடிக்க இயலாது என்றும் சிரித்தவாறு கூறினார்.