Advertisement

மொபட் மீது லாரி மோதி விபத்து; தந்தை கண் எதிரே மகள் பலி

By: Monisha Sat, 08 Aug 2020 3:34:30 PM

மொபட் மீது லாரி மோதி விபத்து; தந்தை கண் எதிரே மகள் பலி

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது 43). இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் கிருஷ்ணன் (5). தங்கராஜூக்கு அபிநயா(16) என்ற மகளும் இருந்தார். தற்போது அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.

தங்கராஜ் தனது மகன், மகளுடன் மொபட்டில் பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். நசரத்பேட்டை அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி, இவர்களது மொபட் மீது மோதியது.

moped,truck,crash,highway,arrested ,மொபட்,லாரி,விபத்து,நெடுஞ்சாலை,கைது

இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அபிநயா, தந்தை, தம்பி கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். தலையில் காயமடைந்த தங்கராஜ், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கிருஷ்ணன், காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ஏழுமலை(60) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
|
|
|