அல்பர்ட்டாவில் கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் புதுப்பிப்பு
By: Nagaraj Sat, 14 Nov 2020 10:18:54 PM
நேர வரையறைகள் புதுப்பிப்பு... அல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பல தற்காலிக, நேர வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
முதலாவதாக, பெரிய நகரங்களிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ளரங்கக் குழு உடற்பலப்பயிற்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதாவது நவம்பர் 27ஆம் திகதி வரை இது நீடிக்கும்.
குழு பாடல், நடனம் மற்றும் நாடகக் குழுக்களுக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேம்பட்ட நடவடிக்கைகளைக் கொண்டுள்ள கல்கரி மற்றும் எட்மண்டனில் அனைத்து
இடங்களிலும் அனைத்து உணவகங்களும் மதுக்கடைகளும் இரவு 10 மணிக்குள் மதுபான
விற்பனையை நிறுத்த வேண்டும். இரவு 11 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
கென்னி
ஒரே மண்டலங்களில் உள்ள 50 பேருக்கு திருமணங்கள் மற்றும் இறுதிச்
சடங்குகளில் கூட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, நம்பிக்கை
அடிப்படையிலான சேவைகள் மேம்பட்ட நடவடிக்கைகளைக் கொண்ட இடங்களில் மூன்றில்
ஒரு பங்கு கொள்திறனுடன் மட்டுப்படுத்தப்படும்.