Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று முடிவுகள் தெரியவந்துவிடும் - கேத்தி புக்வார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று முடிவுகள் தெரியவந்துவிடும் - கேத்தி புக்வார்

By: Karunakaran Fri, 06 Nov 2020 08:20:26 AM

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று முடிவுகள் தெரியவந்துவிடும் - கேத்தி புக்வார்

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தேர்தல் நடந்தது. தற்போது இந்த தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சமீபத்திய தரவுகளின்படி, பிடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதில் பிடனுக்கு 50.4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், டிரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. முன்னாள் துணை ஜனாதிபதி பிடன் இப்போது அமெரிக்காவின் 46 வது அதிபராக ஆறு வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.

மறுதேர்தலைக் கோரும் டிரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். தற்போது அமெரிக்க தேர்தலின் இறுதி முடிவுகள் அலாஸ்கா(3), ஜார்ஜியா (16), நெவாடா (6), வட கரோலினா (15) மற்றும் பென்சில்வேனியா (20) ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்து அமைய உள்ளது. பிடன் ஓரளவு முன்னிலை வகிக்கும் நெவாடா (6) தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

us,presidential election,trump,joe biden ,அமெரிக்கா, ஜனாதிபதித் தேர்தல், டிரம்ப், ஜோ பிடென்

குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு ஆரம்பத்தில் டிரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வருகிறார். இதனால் ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக பிரச்சாரக்குழு கூறுகிறது.

பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று தெரியவந்துவிடும் என்று மாநில செயலாளர் கேத்தி புக்வார் தெரிவித்துள்ளர். அதே நேரம் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளதாகவும், இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|