கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் நிவாரண உதவி வழங்கல்
By: Nagaraj Tue, 17 Nov 2020 7:24:45 PM
நிவாரண உதவி வழங்கல்... ராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம பூஜாரிகள் பேரவை சார்பில் தீபாவளி பரிசாக 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
ஊரடங்கால் கிராம கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வாழ்வாதாரமின்றி கிராம கோயில் பூஜாரிகள் தவித்து வந்தனர். இதையடுத்து தீபாவளிக்காக அவர்களுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து பேரவை நிறுவனர் வேதாந்தம் கூறியதாவது: ஊரடங்கால்
வாழ்வாதாரமின்றி தவிக்கும் கிராம பூஜாரிகள் தீபாவளியை கொண்டாடும் வகையில்
நிவாரணப் பொருட்களை வழங்க முடிவு செய்தோம்.
ராமநாதபுரம், தர்மபுரி
ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பூஜாரிகளின் குடும்பத்திற்கு தேவையான அரிசி
மூட்டை, பருப்பு, ரவை, எண்ணெய் உள்ளிட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான
பொருட்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.