Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அ.தி.மு.க. வுக்கு வாக்களிப்பது அவமானம்; மு.க. ஸ்டாலின் பேச்சு

அ.தி.மு.க. வுக்கு வாக்களிப்பது அவமானம்; மு.க. ஸ்டாலின் பேச்சு

By: Monisha Sun, 20 Dec 2020 3:28:45 PM

அ.தி.மு.க. வுக்கு வாக்களிப்பது அவமானம்; மு.க.  ஸ்டாலின் பேச்சு

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் கலந்துரையாடல் கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா, பொருளாளர் டி.ஆர். பாலு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:- ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளேன். தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் அமையும். திமுகவுக்கு இரண்டு பலம் உள்ளது. ஒன்று அண்ணா, மற்றோன்று கலைஞர்.

assembly election,party,meeting,consultation,speech ,சட்டமன்றதேர்தல்,கட்சி,கூட்டம்,ஆலோசனை,பேச்சு

1971-ம் ஆண்டு கலைஞர் தலைமையில் 184 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றதே அந்த வெற்றியை நாம் பெற வேண்டும். நான் என்பதை விடுங்கள்; நாம் என்று மாறினால் தான் நிச்சயம் வெற்றி பெற முடியும். பணத்தை வெல்லும் ஆற்றலை மக்களுக்கு உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும். அ.தி.மு.க. வுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

நமக்கு எதிராக மும்முனை தாக்குதல் நடத்துகிறார்கள். மும்முனை தாக்குதல் நடத்தினாலும் 6-வது முறையாக வெற்றி பெற வேண்டும். நடைபெற உள்ளது தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல். தி.மு.க. வினர் முழு சக்தியை கொடுத்தால் மட்டுமே வெற்றிப்பெற முடியும் . பணமா? மக்கள் மனமா? என்ற நிலையை மாற்றி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
|