Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எங்களிடம் பிரச்னையை சொல்லியிருக்கலாமே; நடிகர் மனோபாலா வேதனை

எங்களிடம் பிரச்னையை சொல்லியிருக்கலாமே; நடிகர் மனோபாலா வேதனை

By: Nagaraj Wed, 09 Dec 2020 8:15:44 PM

எங்களிடம் பிரச்னையை சொல்லியிருக்கலாமே; நடிகர் மனோபாலா வேதனை

எந்த பிரச்னை என்றாலும் எங்களிடம் சொல்லி இருக்கலாமே என்று நடிகர் மனோபாலா அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகை வி.ஜே சித்ராவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் அதிகளவு இருந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொழிலதிபர் ஹேமந்த் ரவி என்பவருடன் திருமணம் நிச்சயம் நிலையில், அவர் நடித்து வரும் தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில், சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடிகை சித்ரா, நேற்றிரவு படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹேமந்த் ரவியுடன் அறையில் தங்கியுள்ளார். ஹேமந்த் ரவி வெளியே சென்ற போது, மின் விசிறியில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

problem,communication,manopala,directly ,பிரச்சனை, தொடர்பு, மனோபாலா, நேரடியாகவோ

இதனையடுத்து, நசரத்பேட்டை காவல்துறையினர் முதல் கட்டமாக ஹோட்டல் நிர்வாகிகள், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட ஹேமந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் நடித்து வந்த தொடரில் நடித்து வரும் பிற நடிகர்களிடமும் விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சித்ராவின் இல்லத்திற்கு சென்ற நடிகர் மனோபாலா, அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். இதன்போது அவர் அழுதுகொண்டே பேட்டிகொடுத்தது அங்கிருந்தோரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியது.

நடிகர் மனோபாலா செய்தியாளர்களை சந்திக்கையில், " நாங்கள் 1300 பேர் இருக்கிறோம். நாங்கள் உதவி செய்திருப்போமே... யாராவது ஒருவரிடம் அவரின் குறையை சொல்லியிருக்கலாமே.. இத்தனை பேர் இருந்தும் அவர் பரிதாபமாக இம்முடிவை எடுத்துள்ளாரே.

எந்த பிரச்சனை என்றாலும் எங்களை தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவோ தெரிவித்து இருக்கலாமே.. அவசரப்பட்டு இம்முடிவை எடுத்துவிட்டாரே என்று கண்ணீர் மல்க மனோபாலா பேசிய நிலையில், இனியாவது ஏதும் பிரச்சனை என்றால் எந்த சமயத்திலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் " என்று தெரிவித்து சென்றார்.

Tags :