- வீடு›
- விளையாட்டு›
- ராஜஸ்தான் அணியை வென்றதால் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற பெங்களூர் அணி
ராஜஸ்தான் அணியை வென்றதால் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற பெங்களூர் அணி
By: Nagaraj Sat, 03 Oct 2020 9:47:34 PM
புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி சாதித்துள்ளது பெங்களூர் அணி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருக்கான புள்ளி பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. துபாயின் அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தட்டுத்தடுமாறி
154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை
அடைந்து பெங்களூர் அணி வெற்றிபெற்றது.
இதில் தேவ்தட் படிக்கல் 63
ரன்கள் எடுத்தார். இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோஹ்லி 53 பந்துகளில் 2
சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரியுடன் 72 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 19வது
ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை அடைந்த பெங்களூர் அணி 8 விக்கெட்
வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பெற்ற
வெற்றியின் மூலம் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி நடப்பு தொடரின் புள்ளி
பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.