- வீடு›
- விளையாட்டு›
- ஐ.பி.எல் தொடரில் இன்று சென்னை- பெங்களூரு அணி மோதல்
ஐ.பி.எல் தொடரில் இன்று சென்னை- பெங்களூரு அணி மோதல்
By: Nagaraj Sun, 25 Oct 2020 12:54:35 PM
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஜ் அணியை எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்திலாவது சென்னை அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
11 ஆட்டங்களில் 8-ல் தோற்று முதல்முறையாக பிளேஅப் வாய்பை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆறுதல் வெற்றிக்காக இன்று களமிறங்கவுள்ளது. தொடர்ச்சியான சறுக்கலால் நிலைகுலைந்து திகைத்து போய் நிற்கும் சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு ஆறுதல் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதுவரை ஆடும் லெனில் இடம் பெறாத கே.எம்.ஆசிப், சாய் கிஷோர், மிட்செல் சான்ட்னெர் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பது குறித்து கேப்டன் டோனி பரிசீலிப்பார்.
10 ஆட்டங்களில் 7-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 14 புள்ளிகளுடன் வலுவாக
உள்ள பெங்களூரு அணி இந்த ஆண்டு வீறுநடை போடுகிறது. கேப்டன் விராட் கோலி,
டிவில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல் ஆகிய வீரர்கள் பேட்டிங்கில்
பலம் சேர்க்கின்றனர். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், கிறிஸ்
மோரிஸ் ஆகியோரின் கலக்கல் பந்துவீச்சும் பெங்களூரு அணிக்கு முத்தாய்ப்பாக
அமைந்துள்ளன.
இவர்களின் கை ஓங்கினால், பெங்களூரு அணிக்கு
தித்திப்பான முடிவே கிடைக்கும். ஏற்கனவே சென்னை அணியை 37 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ள பெங்களூரு அணி கூடுதல் உற்சாகத்தில் களம்
காணும்.