Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி விளக்கம்

கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி விளக்கம்

By: Karunakaran Thu, 08 Oct 2020 2:38:46 PM

கொல்கத்தா அணியிடம் தோல்வியடைந்தது குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி விளக்கம்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 21-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது.

அதன்பின், 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.

chennai team,dhoni,defeat,kolkata team ,சென்னை அணி, தோனி, தோல்வி, கொல்கத்தா அணி

இந்த தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி கூறுகையில், எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது ஆனால் பேட்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக கடைசி நேரத்தில் 1 ரன்கள் மற்றும் பவுண்டரி எடுக்காதது தோல்விக்கு முக்கிய காரணம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவரில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியது எங்களுக்கு நெருக்கடியாக இருந்தது என்று கூறினார்.

சென்னை அணியின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடவேண்டிய நிலையில் 12 பந்தை சந்தித்து 7 ரன்னை மட்டுமே ஜாதவ் எடுத்ததார். இதனால் ஜாதவை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர். மேலும் ஜாதவ் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Tags :
|
|