- வீடு›
- விளையாட்டு›
- முன்பை விட இன்னும் வலுவாக இருக்கிறேன்; மித்தாலிராஜ் பதிலடி
முன்பை விட இன்னும் வலுவாக இருக்கிறேன்; மித்தாலிராஜ் பதிலடி
By: Nagaraj Sun, 09 Aug 2020 09:26:14 AM
2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை எட்டுவதில் ஆர்வமாக இருக்கிறேன் என்று கிரிக்கெட் வீராங்கனை மித்தாலிராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021 ம் ஆண்டு நடைபெற இருந்த பெண்கள் உலககொப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனையும், வர்ணனையாளருமான லிசா தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளதாவது:
'அடுத்த ஆண்டு நடக்க இருந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஓய்வு பெறலாம்
என்று திட்டமிட்டு இருந்த மிதாலிராஜ், ஜூலன் கோஸ்வாமி (இருவரும் இந்தியா),
ரேச்சல் ஹெய்ன்ஸ் (ஆஸ்திரேலியா) போன்ற வீராங்கனைகள் இன்னும் ஒரு வருடம்
காத்திருக்க வேண்டும்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு
பதில் அளிக்கும் வகையில் இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் மிதாலி
ராஜ் தனது டுவிட்டர் பதிவில், 'நிச்சயமாக உலக கோப்பை மீது எனது பார்வையை
பதித்து இருக்கிறேன். எல்லா வகையான சிறிய காயங்களில் இருந்தும் மீண்டு
முன்பை விட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்ச்சியுடனும்,
வலுவாகவும் இருக்கிறேன்.
2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில்
விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை எட்டுவதில் ஆர்வமாக
இருக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.