Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூர் அணி வீரர்கள் சில கேட்ச்களை விடுவார்கள் என நம்பி கொண்டிருக்கிறேன் - கேஎல் ராகுல் கேலி

பெங்களூர் அணி வீரர்கள் சில கேட்ச்களை விடுவார்கள் என நம்பி கொண்டிருக்கிறேன் - கேஎல் ராகுல் கேலி

By: Karunakaran Thu, 15 Oct 2020 7:19:00 PM

பெங்களூர் அணி வீரர்கள் சில கேட்ச்களை விடுவார்கள் என நம்பி கொண்டிருக்கிறேன் - கேஎல் ராகுல் கேலி

ஐபிஎல் தொடரில் இன்று 2-வது முறையாக ஆர்சிபி - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கு முன் இரு அணிகளின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏராளமான கேட்ச்களை தவறவிட்டது. விராட் கோலியே இரண்டு கேட்ச்கள் விட்டார். இதனால் கேஎல் ராகுல் சதம் அடித்தார்.

இதனால் பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்து 97 ரன்னில் வெற்றி பெற்றது. இன்று 2-வது முறையாக மோதும் நிலையில் இன்ஸ்டாகிராமில் நிகழ்வில் இருவரும் உரையாடினர். அப்போது, கேஎல் ராகுல் விராட் கோலியிடம், நாங்கள் ஒரேயொரு போட்டியில்தான் வெற்றி பெற்றுள்ளோம். அதுவும் ஆர்சிபி-க்கு எதிராகத்தான். இது சற்று கூடுதல் நம்பிக்கையை எங்களுக்கு அளிக்கும். நான் எப்போதுமே ஆர்சிபிக்கு எதிராக ரசித்து பேட்டிங் செய்வேன். மீண்டும் ஒரு வாணவேடிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

bangalore team,some catches,kl rahul,virat kohli ,பெங்களூர் அணி, சில கேட்சுகள், கே.எல்.ராகுல், விராட் கோலி

போட்டிக்கு நீங்கள் எவ்வாறு தயார்படுத்துள்ளீர்கள்? என விராட் கோலி கேட்டதற்கு, நான் சொன்னதுபோல், ஒவ்வொரு போட்டியும் தற்போது எங்களுக்கு முக்கியமானதுதான் என கேஎல் ராகுல் கூறினார். வழக்கமான பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கூறுவதுபோல் எனக்கு பதில் அளிக்கக்கூடாது என கோலி கூற, அப்படியெல்லாம் இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் எங்கள் அணி வெற்றிபெற வேண்டியது அவசியம் என ராகுல் தெரிவித்தார்.

நாங்கள் தொடரின் தொடக்கத்தில் மோசமான தோல்வியை சந்தித்தோம். அது உங்களுக்குத் தெரியும் என்று கோலி கூறினார். அதற்கு எனக்குத் தெரியும். உங்களுடைய வீரர்கள் சில கேட்ச்களை விடுவார்கள் என்று நம்பி கொண்டிருக்கிறேன் என ராகுல் நகைச்சுவையாக தெரிவித்தார். அதன்பின், கடந்த சீனில் நானும் இதுபோன்ற நிலையில்தான் சென்று கொண்டிருந்தேன். பந்தை தூக்கி அடிப்பதற்கு முன் இருமுறை யோசிக்க வேண்டும். இது சூப்பர் ஆட்டமாக இருக்கப்போகிறது. நீங்கள் சிறந்த அணி.ஷார்ஜா மிகவும் பொழுபோக்காக இருக்கப் போகிறது என கோலி கூறினார்.

Tags :