Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • எம்எஸ் டோனி அடுத்த சீசனில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை - சஞ்சய் பாங்கர்

எம்எஸ் டோனி அடுத்த சீசனில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை - சஞ்சய் பாங்கர்

By: Karunakaran Sun, 15 Nov 2020 7:26:06 PM

எம்எஸ் டோனி அடுத்த சீசனில் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை - சஞ்சய் பாங்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான இர்பான் பதானும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்காலம் குறித்து பேசியபோது சஞ்சய் பாங்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி நீடிக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.

மேலும் அவர், சுமையை குறைக்கும் வகையில் கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும், 2011 உலக கோப்பைக்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக பணியாற்றினால், அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என கடுமையான தொடர் வரவிருக்கும் நேரத்தில், கேப்டன் பதவிக்கான நபர் தயாராகி விடமாட்டார் என்பதால், சுமையை குறைக்க சரியான நேரத்தில் விராட் கோலியிடம் கேப்டன் பதவியை கொடுத்தார் என்பது எனக்குத் தெரியும் என தெரிவித்தார்.

ms tony,captain,ipl,sanjay bangar ,எம்.எஸ். டோனி, கேப்டன், ஐ.பி.எல்., சஞ்சய் பங்கர்

அந்த வகையில் எம்எஸ் அடுத்த வரும் சென்னை அணியின் கேப்டனாக இருக்க மாட்டார் என உணர்கிறேன். சென்னை வீரராக இடம் பிடித்து டு பிளிஸ்சிஸிடம் கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். அவரின் கீழ் மாற்றங்கள் நடக்கும் என சஞ்சய் பாங்கர் கூறினார்.

13-வது ஐபிஎல் போட்டி இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தோல்வி அடைந்தது. இந்த ஆண்டு சென்னை அணியின் மோசமான தோல்வி பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. டோனியின் வயது காரணமாக அவர் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|