Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியை வழிநடத்துபவர் யார் ?

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியை வழிநடத்துபவர் யார் ?

By: Karunakaran Wed, 28 Oct 2020 11:03:09 AM

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை அணியை வழிநடத்துபவர் யார் ?

தற்போது 13-வது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு செல்லமுடியாமல் வெளியேறியுள்ளது. இது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி மீது பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேட்டி அளிக்கையில், 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை டோனியே வழிநடத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். சென்னை அணிக்காக அவர் 3 முறை கோப்பையை வென்று தந்திருக்கிறார் என்று கூறினார்.

ipl,chennai team,cricket,dhoni ,ஐ.பி.எல்., சென்னை அணி, கிரிக்கெட், தோனி

முதல்முறையாக இந்த சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறவில்லை. ஆனாலும் நாங்கள் செய்த சாதனையை வேறு எந்த அணியும் செய்ததில்லை. ஒரு மோசமான ஆண்டுக்காக எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று அர்த்தம் கிடையாது என காசி விஸ்வநாதன் கூறினார்.

மேலும் அவர், இந்த ஆண்டில் நாங்கள் எங்களது திறமைக்கு தகுந்தபடி விளையாடவில்லை. வெற்றி பெற்றிருக்க வேண்டிய சில ஆட்டங்களில் தோற்று விட்டோம். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரின் விலகல் அணியின் சரிசம கலவையை பாதித்துவிட்டது என்று தெரிவித்தார்.

Tags :
|