Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் டோனியின் மனைவி சாக்சி வெளியிட்ட கவிதை

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் டோனியின் மனைவி சாக்சி வெளியிட்ட கவிதை

By: Karunakaran Mon, 26 Oct 2020 12:07:22 PM

சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் டோனியின் மனைவி சாக்சி வெளியிட்ட கவிதை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றில்கூட நுழையாமல் வெளியேறியது. நேற்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தியது. இதனால் மற்ற அணிகளின் முடிவுகளை கணக்கில் வைத்து, பிளே ஆப் வாய்ப்பு ஓரளவு இருந்தது.

ஆனால் அதன்பின்னர் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்று ரன்ரேட்டையும் பலமாக வைத்துள்ளதால், சென்னை அணியின் பிளே ஆப் கனவு தகர்ந்தது. இந்த முறை முதன் முதலாக சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த தோல்வியைத் தொடர்ந்து சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர்.

poem,ms dhoni,sakshi,csk fans ,கவிதை, எம்.எஸ்.தோனி, சாக்ஷி, சி.எஸ்.கே ரசிகர்கள்

இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சிஎஸ்கே கேப்டன் டோனியின் மனைவி சாக்சி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார். அதில், ‘இது வெறும் விளையாட்டு ... சில போட்டிகளில் வெற்றி பெறலாம், சில போட்டிகளில் தோல்வி அடையலாம், யாரும் தோல்வி அடைய விரும்புவதில்லை, ஆனால் எல்லோரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், உண்மையான வீரர்கள் போராட பிறக்கிறார்கள். அவர்கள் எப்போதும் நம் இதயத்திலும் நம் மனதிலும் சூப்பர் கிங்ஸ்-களாக இருப்பார்கள் என உணர்வுப்பூர்வமாக பதிவிட்டிருந்தார். சாக்சியின் இந்த கவிதையை சிஎஸ்கே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
|
|