Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிளேஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இன்று பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதல்

பிளேஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இன்று பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதல்

By: Karunakaran Fri, 30 Oct 2020 3:17:20 PM

பிளேஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இன்று பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அபுதாபியில் இன்று நடக்கும் 50-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும்.

பஞ்சாப் அணி 12 ஆட்டத்தில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பிளேஆப் சுற்று வாய்ப்பை பிரகாசபடுத்திக்கொள்ளும். பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், கிறிஸ்கெய்ல், மன் திப்சிங், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பஞ்சாப் அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது.

punjab,rajasthan,play-off,ipl 2020 ,பஞ்சாப், ராஜஸ்தான், பிளே-ஆஃப்  ஐபிஎல் 2020

ராஜஸ்தான் அணி 12 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த அணியில் பென்ஸ்டோக்ஸ், ராபின் உத்தப்பா, சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் ஆர்ச்சர் நல்ல நிலையில் உள்ளார். மேலும் ஆல்ரவுண்டர் ராகுல் திவேதியாவும் அதிரடியாக விளையாடக்கூடியவர்.

ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 224 ரன் இலக்கை ராஜஸ்தான் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே மிகவும் முக்கியமானது. வெற்றி பெற்றால் தான் பிளேஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்து கொள்ள முடியும் என்ற நிலையில் இன்று பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

Tags :
|