Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நேற்று பெற்ற வெற்றி பந்து வீச்சாளர்களால் கிடைத்தது - வார்னர்

நேற்று பெற்ற வெற்றி பந்து வீச்சாளர்களால் கிடைத்தது - வார்னர்

By: Karunakaran Wed, 30 Sept 2020 2:26:49 PM

நேற்று பெற்ற வெற்றி பந்து வீச்சாளர்களால் கிடைத்தது - வார்னர்

அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் 11-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 15 ரன்னில் டெல்லியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது.

ஐதராபாத் பெற்ற முதல் வெற்றியாகும். அந்த அணி முதல் 2 ஆட்டங்களில் தோற்று இருந்தது. இந்த வெற்றி குறித்து ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் கூறுகையில், பந்து வீச்சாளர்களால் இந்த வெற்றி கிடைத்தது. கடைசி கட்டத்தில் (டெத் பவுலிங்) எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ரஷித்கானும், புவனேஸ்வர்குமாரும் அபாரமாக பந்து வீசினார்கள். மிச்சேல்மாஸ் காயமடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இளம் வீரர் அபிஷேக் சிறப்பாக பந்து வீசினார் என்று கூறினார்.

victory,bowlers,warner,hydrabad ,வெற்றி, பந்து வீச்சாளர்கள், வார்னர், ஹைதராபாத்

டெல்லி அணி முதல் தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தோல்வி குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், 163 ரன். எடுக்கக்கூடிய இலக்குதான். ஆனால் நாங்கள் சரியாக ஆடவில்லை. ஐதராபாத் அணி எங்களை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டது. அவர்களது பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது என்று கூறினார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 4-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை வருகிற 2-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்சை 3-ந் தேதி எதிர்கொள்கிறது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Tags :
|