தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 உயர்வு

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பிறகு தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த 17-ந் தேதி தங்கம் பவுன் ரூ.38 ஆயிரத்துக்குள் வந்தது. அன்று 37 ஆயிரத்து 440-க்கு விற்று வந்த நிலையில், தொடர்ந்து விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது.

தங்கம் விலை நேற்று பவுனுக்கு மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. சில நாட்களாகவே விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்த நிலையில் நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்து 48-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக தங்கம் விலையில் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 184-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.17 அதிகரித்து ரூ. 4,773 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.66 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 66.40-க்கு விற்கிறது.