ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்வு

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கம் விலை கடந்த சில மாதங்கள் முன்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதனால் 30 ஆயிரத்தில் இருந்த தங்கம் விலை சற்றென 40 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு தற்போது தங்கம் விலை சிறிது சிறிதாக குறைந்து 38 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்து காணப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 176 ரூபாய் உயர்ந்து 37 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு 22 ரூபாய் உயர்ந்து 4 ஆயிரத்து 705க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசு உயர்ந்து 67 ரூபாய் 80 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.